Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, January 30, 2013

விஸ்வரூபம் - ஒரு வெகுஜன ரசிகனின் பார்வையில்


நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் - எந்திரன் படத்துக்கு கூட பதிவு எழுதல.. ஆனா என்னமோ இந்த படத்துக்கு எழுத தோணுச்சு..

தமிழ் படங்களை ஒப்பிட்டு மட்டுமே இந்த பதிவு. அவதார் அளவுக்கு 1000 கோடி செலவு செய்து எடுக்க இங்க சூழ்நிலை இன்னும் அமையவில்லைனு புரிஞ்சா சரி.


ஹாலிவுட் தரத்தை கிட்டதட்ட தொட்டுவிடும் அளவுக்கு நிறைய தொழில்நுட்ப விசயங்கள், பிரமாண்டம். தமிழ்ல முதல் முறையா இந்த அளவுக்கு அதிரடி ஆக்சன் படம் அமைஞ்சது இல்லைனு நிச்சயம் சொல்லலாம்.

ஆப்கான் தீவிரவாதி, அமெரிக்கா, வெடிகுண்டுனு எளிதில் ஊகிக்க கூடிய கதையிலும் நச்சுனு சில பல திருப்பங்களை வைத்தது படத்துக்கு மிகப்பெரிய பலம்..

சாதுவா வரும் கமல் கேரக்டர் சும்மா பிண்ணி பெடலெடுக்கிறாரு.. கெடைச்ச கேப்ல எல்லாம் ஸ்கோர் செஞ்சிருக்காரு (Completely Steals the show).

நடிப்பு.. நேர்த்தி!! என்னா ஒரு அர்ப்பணிப்பு உணர்வு.. கமல்-ரஜினிகிட்ட இருந்து இளைய தலைமுறையாகிய நம்ம கத்துக்க வேண்டிய முக்கியமான விசயம்.. இவ்வளவு தூரம் வளர்ந்துட்டோமே - இனி நம்மல யார் கேள்வி கேட்க போறானு அலட்சியம் இல்லாம நிறைய மெனக்கெட்டு நடிச்சிருக்காரு கமல்.  பூஜா குமாரும் - ஆண்ட்ரியாவும் அவர்களோட பங்கை சரியா செஞ்சிருக்காங்க.. வில்லனா வரும் நடிகர் செம மிரட்டல்.. நாசர் ஒருத்தர மட்டும் தான் சரியா பயன்படுத்திக்கலனு தோணுது..

பாடல்களை படத்தில் காட்சியமைப்புடன் பார்க்கும் போது இன்னும் ரொம்ப நல்லா இருக்குது.. முதல் பாடல் "உன்னை காணாத.." சூப்பர்.. கமல் கலக்கல்ஸ், ஆண்ட்ரியா அழகு! "அணு விதைத்த பூமியிலே" கண்ணீர்.

பிரமாண்டமான ஆப்கானிஸ்தான் பகுதிகள்.. செட் போட்டு எடுத்தாங்களா இல்ல நெசமானு பிரித்து பார்க்க முடியாத அளவு அருமை. தற்போது வரும் தமிழ் படங்கள்ல ஒளிப்பதிவுக்கு தரப்படும் முக்கியத்துவம் ஒலிப்பதிவுக்கு தரப்படுவதில்லை.. விஸ்வரூபத்தில் அருமையான, மிகவும் துல்லியமான ஒலிப்பதிவு.. பல இடங்களில் பக்கத்து சீட்ல, பின்னாடி சீட்ல இருந்து கேட்கிற மாதிரி இருந்தது!

பூஜா குமார் அந்த டாக்டரோட பேசும் காட்சியும், தீவிரவாதிங்க கிட்ட ஹைஜீன் பத்தி பேசறதும், டிஸ்யு பேப்பர் கேக்கறதுமா கதையின் ஊடே, குறிப்பா ஆரம்பத்தில் வரும் satire comedy செம.

நான் வேணும்னா அல்லானு கத்தட்டுமா,, எங்க கடவுள சிலுவைல அடிக்க மாட்டோம் கடல்ல தூக்கி போட்றுவோம்.. எந்தக் கடவுள் காப்பத்துவாருனு வசனங்கள்.. நச்..

அடுத்து கொலை செய்ய பட வேண்டியவன்கிட்டயே சிரிச்சுகிட்டே உதவி கேட்பது, வெடிகுண்டு பொத்தானை அழுத்தும் போது தீவிரவாதிக்கு ஏற்படும் கடைசிநொடி பதட்டம் போன்ற சீன்கள் படத்தோடு மேலும் ஒன்றி போக செய்கிறது..

சற்றே சறுக்கும் க்ளைமேக்ஸ், லாஜிக் ஓட்டைகள் அதிகம்..

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் பற்றி படம் முழுக்க காமிச்சவங்க ஏன் தீவிரவாதம் அங்க அவ்வளவு தலைதூக்க காரணம்னு பட்டும் படாம சொல்லி இருப்பது சரியல்ல. ஒருதலைபட்சமானது.

தேவையே இல்லாத, சர்ச்சைக்குரிய "சில" வசனங்கள்/காட்சிகள் நீக்கினால் நன்று.. சும்மா கெடக்கற சங்க ஊத வேண்டாமே..

தமிழ்ல கிட்டதட்ட "ட்ரூ லைஸ்" அளவுக்கு வந்திருக்க வேண்டிய ஆக்சன் படத்துக்கு ரியாலிட்டி டச் குடுக்குறேன்னு போய் மாட்டிகிட்டாரு கமல்னு தோணுது..

கமல் - திறமையில் நிச்சயம் ஹாலிவுட்காரர்களுக்கு சளைத்தவர் அல்ல, தமிழ் சினிமாவை அடுத்தடுத்த தளங்களுக்கு எடுத்து செல்வதில் பெரும் பங்கு அவருக்கு உண்டு.. தவளைகளா இல்லாம ஏணியா இருந்து தூக்கி விட முடியாட்டியும் கூட பரவாயில்லை - தயவு செய்து அவரை ஒரே அடியா முடக்கி போட்றாதிங்க. ரியல் எஸ்டட், கல்யாண மண்டபம், அரசியல்னு போகாம தொழில் மேல் இருக்கிற வெறிக்காக கமலுக்கு ஒரு ராயல் சல்யூட்.

படம் முழுக்க வன்முறை காட்சிகள் இருப்பதால் பெண்கள் முக்கியமா கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் பார்ப்பது சரியாகாது..

தவிர மற்றவர்கள் நிச்சயம் தியேட்டருக்கு போய் பார்க்க வேண்டிய படம்.. குறிப்பா ஆக்சன் பட ரசிகர்கள்.. 

கொசுறு: பாவம் கமல் - அடுத்ததா ஆப்கான் மொழி படத்துல நடிப்பாருனு அறிக்கை விட வேண்டிய அரசியல் ஆசைகள் இல்லாம வெகுளியாவே வளர்ந்துட்டாரு ;-)

Sunday, December 13, 2009

இன்றைய தமிழ் சினிமாவின் ஒரு பகுதி நிலை (A part of it)

முன்னுரை: போன பதிவுல ரொம்ப நல்ல தரமான படமான முள்ளும் மலரும் பத்தி எழுதியிருந்தேன்..  இந்த பதிவுல இப்ப நம்ம தமிழ் சினிமா இருக்கிற நிலைமைய பத்தி எழுத வேண்டிய அவசியம்..

சமீபத்தில மூணாறு போயிருந்தோம் (வில்லி:: நண்பர்களோட மட்டும்னு போடு!).. திரும்பி வந்துகிட்டு இருக்கும் போது கார்ல ஒரு பாட்டு.. மானா மதுரைக்கு போற மச்சான்னு ஆரம்பிச்சுது.. இந்த பாடல்களோட வரிகள இதுக்கு மேல என் பதிவுல எழுத விருப்பம் இல்ல.. ஒரே ரெட்டை அர்த்த வரிகளோட விரசமா இருந்தது..

சரி எதோ லோக்கல் குத்து பாட்டுனு நெனச்சேன்.. பெங்களூர் சேலம் இடையே கிருஷ்ணகிரி பக்கத்துல நைட் டிபன் கடைகள்ள இருக்கிற ஆடியோ கடைகள்ள இருந்து புதுசு புதுசா பாட்டுக்கள் கேட்கும்.. குடிக்கிற புருசன திருத்தற மாதிரி சில நல்ல பாட்டுக்கள் உட்பட... படத்துல வந்து எல்லாம் நான் பாத்தததில்ல (கேட்டதில்ல)

இப்போ போன வாரத்துல டிவில ஏதோ டிரைலர் பாத்துகிட்டு இருந்தேன்.. அப்போ 'மாட்டுத்தாவணி' ங்கிற படத்துல இருந்து அதே பாட்டு..

மாட்டுத்தாவணிங்கிற வார்த்தைய முதல் தடவையா கேக்குற அன்பர்களுக்கு, இது மதுரைல ஒரு முக்கியமான இடம்.. வெளியூர் பேருந்து நிலையம் இருக்கும் இடம் என்றால் மிகையாகாது, சாலப்பொருந்தும், !!@#!#@#%^#$! (நன்றி: விஜய டி.ராஜேந்தர், அரட்டை அரங்கம்).. சின்ன வயசுல லீவுல அடிக்கடி அத்தை வீட்டுக்கு மதுரைக்கு போனதுண்டு.

Back to Original topic, அடக் கடவுளே தமிழ் சினிமாவுலயே இந்த மாதிரி வர ஆரம்பிச்சிடிச்சா?? (உபயம்: பருத்திவீரன்)


இந்த மாதிரி கேள்விபட்ட உடனே நம்ம எல்லார் மனசுலயும் சாதாரணமா எழற கேள்விகள்:-

1. ஏன் இந்த அளவுக்கு மோசமா எடுக்கிறாங்க?
2. சென்சார் போர்டு என்ன செய்யுது??
3. இத கூட ரசிக்கிற ஆளுங்க இருப்பாங்களா??
4. சின்ன குழந்தைங்க கூட அர்த்தம் தெரியாம இத பாடிகிட்டு இருப்பாங்களே??
5. இது தான் இப்போதைய டிரெண்டா??

இது எல்லாத்துக்கும் என்னுடைய பார்வையிலுருந்து ஒரு சின்ன அலசல்.. இது இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் கிடையாது, இப்ப அடிக்கடி வர ரெட்டை அர்த்த காமெடிகள் மற்றும் இது போன்ற மற்ற பாடல்களுக்கும் சேர்த்துத்தான்.

முதல்ல இப்ப தியேட்டருக்கு போயி சினிமா பாக்குற audience பத்தி..

ரொம்ப நல்ல படங்கள் சிலவற்றைத் தவிர இப்போ பெண்கள் (so is, kids) சினிமா தியேட்டர் பக்கம் போறதில்லங்கறது என் கருத்து.. ஒட்டு மொத்தமா பார்த்தா கல்லூரி மாணவர்கள், ஒரு 16, 17 வயசுல ஆரம்பிச்சு விடலைகளும், இளைஞர்களும் தான் முக்கியமான audience..

என்ன மாதிரி சராசரியான ஆளுங்களுக்கு என்ன பிடிக்கும்கிறத விட, என்ன பிடிக்காது?

வள வள டயலாக்ஸ், too much of செண்டிமெண்ட், இழுவையான படங்கள்

சரி, என்ன பிடிக்கும்?
வேகமா விறுவிறுப்பா லேட்டஸ்ட் தொழில் நுட்ப தரத்தோட இருக்கிற ஆக்சன் படங்கள் (அயன், அஞ்சாதே), நல்ல கதைக்களத்தோட, லாஜிக்கோட இருக்கிற மாதிரி யதார்த்தமான படங்கள்.. (Ex: சுப்ரமணியபுரம், பசங்க, வெண்ணிலா கபடி குழு), காமெடி படங்கள் (சரோஜா), அவரவருக்கு விருப்பபட்ட நடிகர்களோட படங்கள்...

இது எல்லாத்துக்கும் எல்லையும் உண்டு, அளவுக்கு மிஞ்சினால்.... உதாரணங்கள் பல உண்டு.

எனக்கு ஒரு தனிபட்ட வருத்தம், யதார்த்தமா வர படங்கள் ஏன் மதுரைய சுத்தி இருக்கிற கிராமத்துல மட்டும் தான் எடுக்க முடியுமா?? அதுவும் எதாவது ஒரு வகையில சுத்தி சுத்தி வன்முறைய தான் காட்டணுமா??? சேலத்துல, திருச்சியில எல்லாம யதார்த்தமான, Soft ஆன ஆளுங்களே கிடையாதா??? அப்படியே வந்தாலும் ஏன் நம்ம ஆளுங்க அதை ஆர்ட் பிலிம் category ல அத சேர்த்துடறாங்க??

சரி இப்போ திருப்பியும் முதல் விசயத்துக்கு வருவோம்.. அந்த பாட்ட முதன் முதல்ல நண்பர்களோட கேட்கும் போது அதுல இருக்கிற ரெட்டை அர்த்த காமெடி தான் தெரிஞ்சது (உள்ளுக்குள்ள இருந்து ஒரு சைத்தான் சிரிக்குது).. ஆனா இதே பாட்ட குடும்பத்தோட உக்காந்து பார்க்க முடியுமா?? no chance.. So, இன்னொரு விசயத்த மறந்துட்டேன்.. குடும்பத்தோட தியேட்டருக்கு போற பழக்கமும் ரொம்ப குறைஞ்சிடிச்சு... Double Entendre பத்தி விக்கிபீடியா என்ன சொல்லுதுன்னு இங்க பாருங்க.. http://en.wikipedia.org/wiki/Double_entendre

இந்த மாதிரி ரெட்டை அர்த்த பாடல்கள் கோவில் திருவிழா சமயத்துல நடக்கும் கூத்துகள்ள தான் சாதாரணமா இருக்கும் (இங்க நல்ல தெருக்கூத்து கலைஞர்களை எந்த விதத்திலையும் குறிப்பிடல, இது குறவன் குறத்தி டான்ஸ் மாதிரி விசயம்).. அதுவும் நைட் 11-12 மணிக்கு மேல.. பெண்களும், குழந்தைகள் கூட்டமும் குறைந்த பிறகு.. it's more towards the targeted audience.. ஆனா இதே பாட்ட சினிமாவுலயும், டிவிலயும் திரும்ப திரும்ப கேட்க வேண்டிய சூழ்நிலை தான் இப்போது.. உங்கள யாரு இதயெல்லாம் பார்க்க சொன்னது கையில தான் ரிமோட் இருக்கேன்னு சொல்றவங்க கொஞ்சம் Practical ஆ யோசிச்சு பாருங்க pls.. Adults அ விடுங்க, இந்த காலத்து சின்ன பசங்க என்ன ஏதுன்னு முழுசா தெரியாமலயே இந்த மாதிரி பாடல்கள பாடறது ரொம்ப தர்ம சங்கடமான நிலைமை..

ரெண்டாவது இது தான் இந்த காலத்து டிரெண்டா??

இந்த மாதிரி படங்கள், பாடல்கள் இப்ப சமீபத்துல தான் வருதா, இல்லவே இல்ல... ஆரம்பத்துல இருந்தே அப்பப்ப இந்த மாதிரி வந்துகிட்டேத் தான் இருக்கு... ஆனா அதனுடைய அளவும், ரீச்சும் இப்ப அதிகமாயிருக்கு. முன்ன பத்துக்கு 1 படம் வந்தா இப்ப பத்துக்கு 3-4 படம் வருது போல.

கடைசியா திரைத்துறையினர் ஏன் இந்த மாதிரி எடுக்கிறாங்க?

இன்றைய வணிக உலகத்துல தியேட்டருக்கு வர ரொம்ப சில பேரையாவது திருப்தி பண்றோம்னு திரைத்துறையினர் சமரசம் செஞ்சுக்க வேண்டிய நிலைமை.. இவங்க கூட முழுசா விரும்பி இந்த மாதிரி செய்றாங்கனு தோணல? போட்ட பணத்தை எடுக்கவும், தோல்வி பட டைரக்டர், Artistனு ஆகாம தடுக்கவும் இந்த மாதிரி சில விசயங்கள சேர்க்கறாங்க.. போட்டிகள் ரொம்ப அதிகமா இருக்கிற காரணத்தினால தவறுகளும், குறுக்கு வழிகளும் பின்பற்ற படுகின்றன.. இது எங்க போய் முடியும்னு தான் தெரியல..சென்சார் போர்டுல இருந்து இந்த பாட்டு தப்பிச்சதானும் இன்னும் தெரியல... குறிப்பா A - U/A வாங்கின படங்கள் வந்த ரெண்டு மாசம் கழிச்சும் "Film is yet to be certified" னு தான் டிரைலர்ல போடறாங்க..


இவங்களுக்கு இன்னொரு முக்கியமான பிரச்சனை திருட்டு வி.சி.டி.. இப்பல்லாம் படம் வந்து ரெண்டாவது மூனாவது நாளே திருட்டு வி.சி.டி (VCD) கிடைக்குது.. இதை தவிர்க்க தயாரிப்பாளர், வினியோகஸ்தரே Original VCD அ படம் வெளியான உடனே கூடிய சீக்கிரம் வெளியட பட வேண்டியதுதான்.. அதுல வர வருவாயும் முறைப்படுத்தபடும்.. தயாரிப்பாளர்களுக்கு நிச்சயம் ரிஸ்க் குறையும்.. இப்ப மட்டும் எல்லா படத்துக்கும் தியேட்டர்ல என்ன கூட்டம் அலை மோதிக்கிட்டா இருக்கு.. அது மட்டும் இல்லாம தியேட்டர்களையும் தரமா வச்சிருந்தா வரவங்க வராமலா இருப்பாங்க?? தியேட்டர்ல படம் பாக்கறது ஒரு தனி அனுபவம்.. கூட்டமா சேர்ந்து பார்க்கும் போது இருக்கற சந்தோசமே தனி.. போட்டிகள சமாளிக்கவும், குறுக்கு வழிகள பின் பற்றாம இருக்கவும் இத விட்டா வேறு வழி உடனடியா இருக்கானு தெரியல.

நல்ல உலகத்தரமான படங்கள் தமிழ்ல அதிகம் வர வேண்டுங்கறது என்னோட (hopefully, எல்லோருடைய) ஆசை!!

Saturday, December 5, 2009

முள்ளும் மலரும் - படம் பார்த்து கதை சொல் - ரஜினி ரசிகன்



இந்த படம் வந்து 31 வருசம் ஆகுது!! நிச்சயம் பத்தரிக்கைகளிளும், வலையுலகத்திலும் நிறைய விமர்சனங்களும், பாராட்டுக்களும் வந்திருக்கும்.. என்னுடைய வலைப்பூ ரொம்ப புதுசு.. நான் ரொம்ப சாதாரணமானவன் (I am a common man!!).. இந்த ரெண்டு விசயமும் தான் இந்த பதிவ எழுத நம்பிக்கை கொடுத்தது..

நான் ஆர்ட் பிலிம் பார்க்குற ஆளு கிடையாது.. பாட்ஷா, பில்லா, போக்கிரி மாதிரி மாஸ் படங்களோட ரசிகன்.. இது நிச்சயம் விமர்சனமும் அல்ல.. என்னால் தலைவர் படத்த விமர்சனம் பண்ணவும் முடியாது.. So, இந்த படத்திலிருந்து எனக்கு ரொம்ப பிடித்த விசயங்கள் தான் இந்த பதிவு.. இதனோட இருக்கிற போட்டோ ஆல்பத்த மிஸ் பண்ணிடாதீங்க.. please.. இந்த பதிவ + படங்கள் உங்க Bandwidth-அ ரொம்ப சாப்டிருந்தா அதுக்கு ஒரு advance sorry

படம் பார்க்காதவங்களுக்கு ஒரு சின்ன introduction.. படத்தோட கதை ரொம்ப ரொம்ப எளிமையானது (simple - yet powerful).. அண்ணன் - தங்கைக்கிடையே இருக்குற பாசமும், முரட்டு அண்ணன் (ரஜினி - காளி), வெகுளி தங்கச்சி (ஷோபா) மற்றும் ஒரு மென்மையான காதல்தான் (சரத்பாபு - ஷோபா) கதையோட முக்கிய அம்சங்கள்...

கதை: உமா சந்திரன்
...'கல்கி வெள்ளி விழா மலரில் பரிசு பெற்ற கதை!...'

(நன்றி azhagan for pointing me out)

இனி இதில் வர முக்கியமான கேரக்டர்ஸ் பத்தி..

சரத்பாபு:-
படித்த பட்டதாரியா, கிராமத்து அதிகாரியா வரும் இவரு உண்மையில ரொம்ப நல்ல யதார்த்தமான ஆளு.. ரஜினியோட முரட்டு சுபாவத்த புரிஞ்சுக்கிறதும், எப்ப பாத்தாலும் ரூல்ஸ் பேசறதும் அதே சமயம் கஷ்டம்னு வரும்போது கூட இருந்து உதவி பண்றதுமா மெச்சூர்டான கேரக்டர்.. தலைவர் தன் தங்கைய தர மறுக்கும் போது அவரோட முரட்டு சுபாவத்த கண்டு பின் வாங்கறது ரொம்ப இயல்பு.. படத்துல எனக்கு பிடிச்ச இவரோட வசனம் (தம்பிக்கா வக்காலத்து வாங்கற க்ளார்க்குகிட்ட பேசறது)..
"சரத்: ஆமா நம்ம ஆபிஸ்ல தம்பியே இல்லாத கிளார்க் யாராவது இருக்காங்கலா??
க்ளார்க்: ஏன் சார்?
சரத்: நான் காளிய பத்தி உண்மையான விவரங்கள தெரிஞ்சிக்க ஆசை படறேன்!!

ஷோபா:-
ரொம்ப வெகுளியா வர பொண்ணு.. படம் முழுக்க ரொம்ப நல்ல expressions!! அண்ணனுக்காக காதல விட்டு கொடுக்க க்ளைமேக்ஸ்ல முன் வரது ரொம்ப டச்சிங்

ரஜினியின் மனைவி்யா நடிச்சிருக்கிறவங்க..
ரொம்ப casual-ஆ அதே சமயம் கொஞ்சம் அடாவடியான கேரக்டர்.. ஆரம்பத்துல சோத்து மூட்டையா காட்டினாலும் காளி தவறான ஒரு ஆளுக்கு தன் தங்கச்சிய கட்டி கொடுக்கும் முடிவ எடுக்கும் போது எதிர்க்கிறதும், காளிய கையில்லனு கிண்டல் பண்றது தாங்காம போட்டியில கலந்து ஜெயிக்கிறதும், சரத்பாபு கிட்ட போய் பேசி ஷோபாவ கல்யாணம் பண்ண சம்மதிக்க வைக்கறதுமாக கேரக்டர் போகும்.. பிடித்த வசனம்..
casual-ஆ படுத்திருக்கும் போது பார்க்கும் ரஜினியிடம்.. "ஏன்யா முன்ன பின்ன பொம்பளயயே பாத்ததில்லியா!!".. தலைவரோட ரியாக்ஷன் சூப்பர்.

மகேந்திரன் - இளையராஜா - பாலு மகேந்திரா..
Deadly Combination!! ஒவ்வொறு கேரக்டர்லயும், ப்ரேம்லயும் மகேந்திரன் அவருடைய முத்திரை இருக்கும்... இசையராஜா (let the typo to be) பிண்ணனி இசையிலயும், பாடல்களிளையும் வெளுத்து வாங்கியிருக்காரு.. he and this film's music is my all-time favorite.. பாலு மகேந்திரா கிராமம், காடு, மலை, வானமுன்னு கலக்கியிருப்பாரு.. எதோ ஏற்காடு பக்கத்துல (உண்மைல சிக்கமங்களூர்னு நினைக்கிறேன்) எடுத்த மாதிரியோ ஒரு பீலிங்.. முப்பது வருசம் முன்னமே இவ்வளவு டீடெய்லா - royal salute :) இந்த படத்துல இவங்க work பத்தி இன்னும் பத்து பதிவு போடலாம்.. நேரமி்ன்மை காரணமா இவங்கள பத்தி இதோட நிறுத்திக்கிறேன்..

LAST BUT NOT THE LEAST, தலைவர் ரஜினி்யோட (முரட்டு) காளி Performance பத்தி... இந்த படத்துல தலைவர் நடிக்கல, வாழ்ந்திருக்காரு (விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன).. இப்ப திரும்ப இதே மாதிரி படமெல்லாம் அமையுமா?? எல்லோரும் வழக்கமா கேக்குற அதே கேள்வி,, ஏன் இதே கூட்டணியில இது மாதிரி, ஜானி மாதிரி இன்னும் நிறைய படங்கள் வரல?????

இனி ஒரு போட்டோ மாலை.. படங்களை பெரிதாக்கிட க்ளிக் செய்யவும்.. Don't miss my comments too :)

1978 ஆம்.. நம்ப முடியல!!


சின்ன பசங்க.. கண்ணுல கூட நடிப்பு.. மகேந்திரன்!!



தலைவர் Intro!!!!!!!!!!




(சரத்பாபு யாருன்னு தெரியாம)  சார் யாருன்னு சொல்லலயே???


கோபம், சமாளிப்பு :)



விளையாட்டு + In Direct message to சரத்பாபு


தலைவர் casual-ஆ உக்காந்து இருக்கிற போஸ் பாருங்க,




வாசிங்க சார்..... வாசிங்கடா டேய்!!


அவசரமா கூப்பிட்டாரா.. தா உடனே வந்துடறேன்...


தங்கச்சி காலுக்கு மருதாணி... ஐயோ, ஐயோ இப்ப இப்படி Natural-ஆ பாக்க முடியறதில்லியே..


பார்த்துக்கிறேன் சார்..
 

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல!!






 

மேலே கல்யாணத்திற்கு முன்... கீழே கல்யாணத்திற்கு பின்.. தலைவருக்கு கூடவா.. சும்மா காமெடி!!!

 

(வேலைய விட்டு நீக்கும் போது) என்னா முடிவே பண்ணிட்டீங்களா..
 

(எனக்கு ரொம்ப பிடிச்ச சீன், வசனம்) கெட்ட பையன் சார் இந்த காளி.. ரெண்டு கை, ரெண்டு கால் போனா கூட பொழச்சிக்குவான் சார்.. என்னா ஒரு ego!!!
 

தலைவரோட ஷ்டைல், என்னா ஒரு முரட்டு தோற்றம்!!


தங்கச்சிக்கு அட்வைஸ்

 

தங்கச்சியவாடா தப்பா பேசறே... (கீழே கெடக்கறது.. வெண்ணிற ஆடை மூர்த்தி!!)
 

டச்சிங் க்ளைமேக்ஸ்..
 

கண்ணீர்





பிரிவு
 

சேர்க்கை, மகிழ்ச்சி!!


பெருமை


இன்ஞினியர் சார் எனக்கு உங்கள இப்பவும் பிடிக்கல.. இருந்தாலும் என் தங்கச்சிக்காக..
 

 


எனக்கு ரொம்ப பிடிச்ச ரெண்டு சீன்ஸ்..




Mullum Malarum Touching Climax



(உண்மையில் இந்த பதிவ எழுத ஆரம்பிக்கும் போது தலைவர் பிறந்த நாள் இன்னும் ஐஞ்சாறு நாள்ல வரது ஞாபகம் இல்ல.. இப்ப இது தலைவருக்கும், அவரோட ரசிகர்களுக்கும் ஒரு பிறந்த நாள் பரிசு)