குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டப்படி உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும். ஓட்டுப் போடாதவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். சட்ட மசோதாவை சட்ட சபையில் தாக்கல் செய்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
நன்றி: மாலைமலர்
இந்த செய்திய மாலைமலர் இணைய தளத்துல படிச்சதும் என்னை அறியாம சொல்லிகிட்டது.. Ohh! Shit!!..
நல்லவரோ கெட்டவரோ நம்ம நாட்டில யாருக்கு இவ்வளவு தைரியம் இருக்குது????? (உள்ளுக்குள்ள இதெல்லாம் சும்மா ஸ்டண்ட்டுனும் ஒரு பட்சி கூவுது!!).. அதே மாதிரி எதிர்கட்சினா கண்ண மூடிட்டு எல்லாத்தையும் எதிர்க்கனுமா என்ன???
என்னை மாதிரி சோம்பேறிகளுக்கு எல்லாம் இந்த மாதிரியெல்லாம் செஞ்சாதான் கொஞ்சம் புத்தி வந்து ஓட்டு போடற அன்னிக்கு டிவி, கம்ப்யூட்டர் எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு போய் க்யூவுல நின்னு ஓட்டு போட தோணும்!!
படிச்சவங்க சும்மா வாய்கிழிய பேசிட்டு டிவி முன்னாடியும், சினிமா தியேட்டர்லயும், இல்ல ப்ளாக் போடவும் ஒக்காதுடறாங்க.. சொல்ல போனா அன்னிக்கு ஒரு நாளைக்கு சினிமா தியேட்டர்களுக்கும் லீவு விட்டிடலாம்.. டிவிங்களுக்கும் அன்னிக்கு ஒரு நாள் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லலாம்.. இல்லனா இந்திய தொலைக்காட்சிகளி்ல் முதல் முறையாகனு எதாவது டப்பா படத்த போட்டுடுவாங்க!!
இப்பெல்லாம் நம்ம தொகுதி பிரதிநிதிய 40% ஆளுங்க தான் தேர்ந்தெடுக்கறாங்க.. அதாவது மொத்தமே 60-70% தான் சராசரியா ஓட்டு பதிவாகுது.. அதுல இருந்து 50-60% வாங்குனவங்கதான் ஜெயிச்சு சட்டசபைக்கும், நாடாளுமன்றத்துக்கும் போறாங்க..
இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தா, நம்மூரு அரசியல்வாதிகளும் எத்தன ஆளுங்களத்தான் Canvas (!!) செய்ய முடியும்???? இதவிட டீசெண்ட்டா சொல்ல முடியல!!
அப்படியே வேட்பாளர்களுடைய சொத்து விபரம் (முன்பு வெற்றி பெற்றிருந்தால், போன ஆட்சி காலத்திற்கு முன்-பின்), அவர்கள் மேல் நிலுவையில் இருக்கும் வழக்கு விவரங்களையும் ஓட்டு போடும் இடங்களில் வைத்தால் அவர்கள் எத்தனை நல்லவர்கள் என தெரிந்து கொண்டு வோட்டு போட முடியும்!!