Thursday, November 19, 2009

பேராண்மை - சில திருத்தங்கள்

தீபாவளிக்கு சேலம் போயிருந்தபோது இந்த தடவ எதிர்பார்த்த சில படங்கள் (வேட்டைக்காரன், யோகி, ...) ரிலிஸ் ஆகல..

தீபாவளிக்கு முந்தின நாள் இரவு காட்சிக்கு பேராண்மை முன்பதிவு செஞ்சு வெச்சிருந்தோம்.. தீடிர்னு ஆதவன் வேற சிறப்பு காட்சி போடறாங்க.. டிக்கெட் வெல சாதாரணமா 150 - 200 னு சொல்றாங்க..

பேராண்மை படத்த, அதிலிருந்த கருத்துக்கள பத்தி ஏராளமான விமர்சனங்கள வந்திருச்சி.. இந்த பதிவு அது எத பத்தியும் இல்ல.. திரைக்கதை சில மாற்றங்கள பண்ணி இருந்தா இன்னும் ரொம்ப நல்லா.. உண்மையாலுமே ஆங்கில படத்துக்கு இணையா ஒரு தமிழ் படம் கெடச்சிருக்குமோனு தோணுது.. இது முழுக்க முழுக்க நானே சிந்திச்சது (கோவை சரளா போல படிக்கவும்)..

1. ஜெயம் ரவி Discovery சேனல்ல வர commentator மாதிரி ரன்னிங் commentary கொடுத்துகிட்டே இருக்கிறது பயங்கர கடுப்பு.. ஆக்சன் படத்துக்கு தேவையான விறுவிறுப்பையும், வேகத்தையும் கெடுக்குது.. நச் நச்னு வசனம் இருந்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்..

2. பருத்திவீரன்ல போலிஸ் ஏட்டை படுத்துவாங்களோ அந்த மாதிரி சர்வதேச கூலிப்படைய டீல் பண்ணுவது கொஞ்சம் கூட workout ஆகல - பொருந்தல.. தரணி இந்த மாதிரி விசயத்துல கில்லாடி (தூள், கில்லி மாதிரி சில படங்கள் மட்டும்).. ஹீரோவ நல்லா சிக்கல்ல மாட்டி விட்டுட்டு கடைசி நேரத்துல பூந்து வெளயாட வுடுவாரு.. லாஜிக்கே இல்லங்குறது படத்த முடிச்சதுக்கப்புறம் தான் தோணும்..

3. வெளிநாட்டு தீவிரவாதிங்க பெரிய பெரிய துப்பாக்கிய அவங்க வைச்சுகிட்டு, வெறுங்கையோட வர ரவி & கோ வ பார்த்துட்டு ஓடறாங்க.. என்ன கொடும சார் இது..

4. உண்மையா இவங்க (ரவி & கோ) ஓடி ஒளிஞ்சு அப்பப்போ கொரில்ல முறையில தாக்கறமாதிரி இருந்திருக்கலாம்.. திரில் மெயின்டெய்ன் ஆகி இருக்கும்..

5. காட்டுக்குள்ள பாட்டு, பர்த் டே கொண்டாடுறது (கேக் கட் பண்ணி) ரொம்ப ஓவர்..

6. திரும்பி போய் உதவிய கூட்டிட்டு வற பொண்ணு (காதல்ல வற ஃப்ரெண்டு.. உங்க போதைக்கு நாங்க ஊறுகாயான்னுவாங்களே) ரொமான்டிக் மூடுலயே அலையிறதும் எனக்கு பிடிக்கல.. காட்டுக்குள்ள வற பாட்டுல பொண்ணு சுதந்திரமுன்னு வரிகள வச்சிட்டு இது ரொமாண்டிக்கா ரவிய பார்த்துகிட்டே இருக்குது.. எ.கொ.சா இது??

சில நல்ல விசயங்கள்..

1. ரவி இந்த மாதிரி ஒரு நேரடி தமிழ் கதைய தேர்ந்தெடுத்தது.. அவரால முடிஞ்ச அளவுக்கு நல்லா பண்ணியிருக்காரு.. வாழ்த்துக்கள்

2. தமிழுக்கு (இப்போ இருக்க ட்ரெண்டுக்கு) வித்தியாசமான, கொஞ்சம் புதிய கதைக்களம்

3. அங்கங்க நச் நச் வசனங்கள்..

4. சாதி வேறுபாட்ட இவ்ளோ வெளிப்படையா வெளிச்சம் போட்டு இருக்கிறது..

5. பொண்வண்ணனுக்கு ஒரு சலாம்... கொஞசம் கூட நல்ல விசயங்களே இல்லாத கேரக்டர ஒத்துகிட்டு பண்ணியிருக்கறது..

6. ரவிக்கு ஜோடியா யாருமே இல்லாதது..

7. கொஞ்ச நேரமே வர வடிவேலு..

Wednesday, November 18, 2009

வெளவால தீயில போட்டு

ஒரு குட்டி பதிவு

இன்னிக்கு எதோ படிச்சு கிட்டு இருந்த போது
this is THE property of ... னு வந்தது..

நான்: திஸ் இஸ் தீ பிராப்பர்டி....

பொ: 'தீ' பிராப்பர்டினு சொல்லக்கூடாது.. நெறையா பேர் இப்படி தான் சொல்றாங்க..

ம.சா: சரி, சொல்லிட்டு போகட்டும்.. ஆரம்பிச்சுட்டாயா ஆரம்பிச்சுட்டா

பொ: வெளவல் (vowels) க்கு தான் 'தீ'னு உச்சரிக்கனும்

ம.சா: ஏன் வெளவாலுக்கு தீ ரொம்ப புடிக்குமா?? சுட்டு சாப்பிட்டதே இல்லியே!! அப்ப காக்காவுக்கு தண்ணினு சொல்லனுமா..

நான்
: அப்படியா.. நீ ரொ....ம்ப புத்திசாலி

(பொ: பொண்டாட்டி, ம.சா: மனசாட்சி)


பதிவுக்குள்ள பதிவு: II

நமக்கு சீரியல்னாலே அலர்ஜி.. பொண்டாட்டியும் அவ்ளோவா பாக்க மாட்டா..
7மணி.. எதோ பாட்டு சத்தம்.. நீல கலர்ல இங்கியும் அங்கியும் ஓடிகிட்டுருந்தாங்க..

பொ: விஜய் டிவீல மகாராணி சீரியல்ல பாட்டு நல்லாருக்கும்...
நான்: சரி, மியூட்ல வச்சி கேளு!!


பதிவுக்குள்ள பதிவு: III

ரொம்ப சமீபத்துல ரசிச்ச ஜோக்..
(அம்மா) அய்யய்யோ.. பொண்ணு வெள்ளி கிழமையும் அதுவுமா ஓடி போயிட்டாலே..
சந்தானம்: அப்ப சனிக்கிழமை ஓடிப்போனா பரவாயில்லையா?? பாரு எல்லாம் ஓடிப்போறதுக்கு ரெடியா வரிசையா உக்காந்துகிட்டு இருக்கிறத!!

(கண்டேன் காதலை)

வடிவேல், சந்தானம் காமெடி தனித்தனியா பாக்கவே சூப்பரா இருக்கும்..
இதுல திருப்பியும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்துல நடிக்கறாங்களாம்.....

வடிவேலு அவரு பாணில நடிக்க, பேச அத சந்தானம் ஓட்ட... நல்லா ஹிட்டாச்சுனா ஒரு புது காம்பினேசன் கெடைக்கும்..

Monday, November 16, 2009

சேலம் - செவ்வாய்பேட்டை / பழைய பஸ் ஸ்டாண்டு - சிறு வயது ஞாபகங்கள்

நான் முதன் முதலா என்னா எழுதலாமுன்னு யோசிச்சப்போ, சின்ன வயசுல தான் life ரொம்ப interesting-ஆ போன மாதிரி கொஞ்சம் தோனுச்சு.. சரி அதப்பத்தியே பார்ப்போம்.. எனக்கு இப்ப 26 தான் ஆகுது.. படிச்ச பள்ளிக்கூடம் பத்தி முடிஞ்சா தனி பதிவ போடலமுன்னு ஒரு ஐடியா..

ஒரு 13 - 14 வயசுல (பிஞ்சுலயே பழுத்தது) ஆரம்பிச்சு பயங்கரமா ஊர் சுத்தி, கிரிக்கெட் விளையாண்டு, சினிமா பார்த்து ரொம்ப ஜாலியா இருந்தத பத்தி பார்ப்போம்.. அதுக்கும் தலைப்புக்கும் என்னா சம்பந்தம்??

அப்ப ப.பே.நி (பழைய பேருந்து நிலையம்) சு்த்தி கிட்டதட்ட 30 சினிமா தியேட்டர் இருந்நது.. ஞாயிற்று கிழமைகள்ள அரிசி கடை (கணக்கு பிள்ளை) மாமாங்க கூட சேர்ந்து காலைல ஃபுல்லா கிரிக்கெட் விளையாண்டுட்டு அப்படியே வரிசையா 3 சினிமா தொடர்ச்சியா பார்ப்போம்.. டிக்கெட் 1.75 க்கு மேல போக மாட்டோம் (அதிகபட்சமே 8-10 தான் இருக்கும்)..

தப்பி தவறி எதாவது ஹிட் படத்தோட் தரை டிக்கெட் கவுஃண்டர்ல மாட்டுனா அவ்ளோ தான்.. ரெண்டு மூனு மணி நேரம் அங்கியே டேராதான்.. மூச்சு விட கூட முடியாது.. லோக்கல் ரவுடிங்க சாதாரணமா தலை-தோல் மேல கால வைச்சு நடந்து போவானுங்க, எப்ப பாத்தாலும் அடி தடி சண்டைதான் (நம்ப வீரமா வேடிக்க பார்க்கறதோட சரி).. போதாக்குறைக்கு போலிஸ் வேற சைடுல கன்னா பின்னானு அடிப்பாங்க.. இதே மாதிரி திருவண்ணாமலைல கிரிவலம் போயிட்டு ஹேராம் படத்துக்காக வெயிட் பண்ணினப்போ பர்ஸ எவனோ அடிச்சிட்டான் (மொத்தமே 85 தான் இருந்ததா ஞாபகம்).. நல்ல வேளைக்கு கூட அந்த ஊர் ப்ரெண்ட்ஸ் கூட இருந்தாங்க..

எதாவது டப்பா படம் வந்தா உடனே எடுத்துடுவாங்கனு அததான் முதல்ல பார்ப்போம்.. முடிச்சுட்டு வந்தா ரெண்டாவதா பாத்த படத்துல ஹீரோ சரத்குமாரா கார்த்தியானு confuse ஆகி, ப்ரெண்ட்ஸ் கூட பயங்கரமா விவாதம் பண்ணுவோம். அப்போ ஷங்கர் / கேப்டன் படத்த பார்த்துட்டு 2000/2010-ல இந்தியா (தானா) வல்லரசிகிடும்னு பேசிட்டு தூங்கிடுவோம்.. அதுல்ல ஒரு சந்தோஷம்-சுயநலம்.. என்னமோ நமக்கு எல்லாரும் (ஒன்னும் பண்ணாமலே) சலாம் போட போறதா நெனப்பு..

காந்தி ஸ்டேடியம், CSI School-னு, சின்ன சின்ன கிரவுண்டுங்க (உபயோகத்தில இல்லாத அப்பள கம்பெனி வரை) நிறையா கிரிக்கெட் விளையாட முடிஞ்சது.. சின்ன வயசுல புவி ஈர்ப்பு விசைங்கற ஒன்னையே மறந்த சமயம்.. watchman துரத்தினா ரொம்ப சுலபமா 10-15 அடி உயர கேட்டு, சாரமுன்னு ஏறி escape ஆகிடுவோம்.. பாவம் எங்கள புடிக்க முடியாம எத்தன ஆளுங்க மாறுனாங்கனு தெரியல..

சேலத்துல ஓட்டல சாப்பிடறது ரொம்ப ரொம்ப சகஜமான ஒன்னு.. ஏகப்பட்ட ஓட்டலுங்க.. இதுல எனக்கு பிடிச்சது.. ரொம்ப detail-ஆ இன்னொறு பதிவுல பார்ப்போம்

மங்களம், விவேகானந்தா, மத்த மிலிட்டரி ஹோட்டலுங்க - தோசை, சிக்கன் வருவல், கொழம்பு,
பிரியாணி கடைங்க, சூப் கடைங்க: ஆட்டுக்கால் (சூப்), கோழி சூப், ரத்த பொறியல், மசாலாவுல ஊறப்போட்ட முட்டை, குஷ்பு இட்லி + மெல்லிசான கொழம்பு..
செவ்வாய்பேட்டை: ஆதி பராசக்தி / (பாம்பே) சுந்தர விலாஸ் / கந்த விலாஸ் / நைட் கடைங்கனு ஏகப்பட்ட எடத்துல நாள் ஃபுல்லா போய் ஒரு வெட்டு வெட்ட ரொம்ப வசதியான ஏரியா

இன்னும் தோட்டத்து கிணத்துல நீச்சல் வகுப்பு எடுத்தது.. பைக்ல சேலம் ஃபுல்லா சுத்துனது, (எவ்ளோ...... பெரிய்யயயயயய மா(வட்டம்)த்தரே...), சோப்பு கம்பெனில part-time ஆ வேல பார்த்ததுனு நிறைய பாக்கலாம்..

பொண்டாட்டி ரொம்ப முறைக்கிறா.. I am the ESCAPE!!!

ஆரம்பம்

எல்லாருக்கும் வணக்கம்.. நான் (வசந் என்கிற வசந்தகுமார்)* சேலத்துல* இருந்து வரேன்.. எனக்கு கொஞ்சம் கம்ப்யூட்டர்*, கொஞ்சம் ஜாவா* தெரியும்.. சேலம் - பெங்களூருக்கு* 200 கிமீ தான், 20 நிமிசத்துக்கு ஒரு பஸ்* இருக்கு.. so இப்போ நான் எங்க இருக்கேன் என்னா பண்றேனு கண்டுபிடிக்க மதுகோடாவ விட்டுட்டு CBI-ஆ வருவாங்க

இப்போ ரொம்ப recent-ஆ (ரெண்டு மூனு நாளா) தமிழ்மணத்துல பதிவுகள படிச்சதுல இருந்து நம்ம ஏன் ஒரு பதிவ ஆரம்பிக்க கூடாதுன்னு நெனச்சு இத ஆரம்பிச்சுட்டேன்*.. இதத்தான் Generation Y-னு சொல்றாங்களோ??

இத எழுதலாமுன்னு நெனச்ச போது US காரனே வேலய முடிச்சுட்டு வூட்டுக்கு போற டைம் ஆகியிருக்கும்.. பொண்டாட்டி என்ன ப்ளாஃக்-ஆ போடா பொறுக்கினு திட்டிட்டு திரும்பி தூங்கிட்டா*

மனசுல இருக்கறத அப்படியே எழுதினா அட்ரஸ் கண்டுபுடிச்சு வூட்டுக்கு ஆட்டோ எதாவது வராத வரைக்கும் நல்லது.. கன்னடா ரக்சனே காரனுங்களுக்கு தமிழ் படிக்க வராதுன்னும் நம்பிக்கை தான்.. எதோ படத்துல சொல்ற மாதிரி நம்பிக்கை தான வாழ்க்கைனு!!

நமக்கு தமிழ், தலைவர் (ரஜினிதாங்க*), சேலம், நண்பர்கள், ஜாவா, பயணங்கள், சரித்திரம், சிக்கன் (சாப்பிட மாட்டும்), ... , இதெல்லாம் ரொம்ப இஷ்டம்..

பாக்கலாம் இந்த முயற்சி எப்படி போகுதுன்னு!!

* - இதுக்கெல்லாம் ஒரு தனி பதிவே போடலாமுன்னு தோனுது