Sunday, December 13, 2009

இன்றைய தமிழ் சினிமாவின் ஒரு பகுதி நிலை (A part of it)

முன்னுரை: போன பதிவுல ரொம்ப நல்ல தரமான படமான முள்ளும் மலரும் பத்தி எழுதியிருந்தேன்..  இந்த பதிவுல இப்ப நம்ம தமிழ் சினிமா இருக்கிற நிலைமைய பத்தி எழுத வேண்டிய அவசியம்..

சமீபத்தில மூணாறு போயிருந்தோம் (வில்லி:: நண்பர்களோட மட்டும்னு போடு!).. திரும்பி வந்துகிட்டு இருக்கும் போது கார்ல ஒரு பாட்டு.. மானா மதுரைக்கு போற மச்சான்னு ஆரம்பிச்சுது.. இந்த பாடல்களோட வரிகள இதுக்கு மேல என் பதிவுல எழுத விருப்பம் இல்ல.. ஒரே ரெட்டை அர்த்த வரிகளோட விரசமா இருந்தது..

சரி எதோ லோக்கல் குத்து பாட்டுனு நெனச்சேன்.. பெங்களூர் சேலம் இடையே கிருஷ்ணகிரி பக்கத்துல நைட் டிபன் கடைகள்ள இருக்கிற ஆடியோ கடைகள்ள இருந்து புதுசு புதுசா பாட்டுக்கள் கேட்கும்.. குடிக்கிற புருசன திருத்தற மாதிரி சில நல்ல பாட்டுக்கள் உட்பட... படத்துல வந்து எல்லாம் நான் பாத்தததில்ல (கேட்டதில்ல)

இப்போ போன வாரத்துல டிவில ஏதோ டிரைலர் பாத்துகிட்டு இருந்தேன்.. அப்போ 'மாட்டுத்தாவணி' ங்கிற படத்துல இருந்து அதே பாட்டு..

மாட்டுத்தாவணிங்கிற வார்த்தைய முதல் தடவையா கேக்குற அன்பர்களுக்கு, இது மதுரைல ஒரு முக்கியமான இடம்.. வெளியூர் பேருந்து நிலையம் இருக்கும் இடம் என்றால் மிகையாகாது, சாலப்பொருந்தும், !!@#!#@#%^#$! (நன்றி: விஜய டி.ராஜேந்தர், அரட்டை அரங்கம்).. சின்ன வயசுல லீவுல அடிக்கடி அத்தை வீட்டுக்கு மதுரைக்கு போனதுண்டு.

Back to Original topic, அடக் கடவுளே தமிழ் சினிமாவுலயே இந்த மாதிரி வர ஆரம்பிச்சிடிச்சா?? (உபயம்: பருத்திவீரன்)


இந்த மாதிரி கேள்விபட்ட உடனே நம்ம எல்லார் மனசுலயும் சாதாரணமா எழற கேள்விகள்:-

1. ஏன் இந்த அளவுக்கு மோசமா எடுக்கிறாங்க?
2. சென்சார் போர்டு என்ன செய்யுது??
3. இத கூட ரசிக்கிற ஆளுங்க இருப்பாங்களா??
4. சின்ன குழந்தைங்க கூட அர்த்தம் தெரியாம இத பாடிகிட்டு இருப்பாங்களே??
5. இது தான் இப்போதைய டிரெண்டா??

இது எல்லாத்துக்கும் என்னுடைய பார்வையிலுருந்து ஒரு சின்ன அலசல்.. இது இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் கிடையாது, இப்ப அடிக்கடி வர ரெட்டை அர்த்த காமெடிகள் மற்றும் இது போன்ற மற்ற பாடல்களுக்கும் சேர்த்துத்தான்.

முதல்ல இப்ப தியேட்டருக்கு போயி சினிமா பாக்குற audience பத்தி..

ரொம்ப நல்ல படங்கள் சிலவற்றைத் தவிர இப்போ பெண்கள் (so is, kids) சினிமா தியேட்டர் பக்கம் போறதில்லங்கறது என் கருத்து.. ஒட்டு மொத்தமா பார்த்தா கல்லூரி மாணவர்கள், ஒரு 16, 17 வயசுல ஆரம்பிச்சு விடலைகளும், இளைஞர்களும் தான் முக்கியமான audience..

என்ன மாதிரி சராசரியான ஆளுங்களுக்கு என்ன பிடிக்கும்கிறத விட, என்ன பிடிக்காது?

வள வள டயலாக்ஸ், too much of செண்டிமெண்ட், இழுவையான படங்கள்

சரி, என்ன பிடிக்கும்?
வேகமா விறுவிறுப்பா லேட்டஸ்ட் தொழில் நுட்ப தரத்தோட இருக்கிற ஆக்சன் படங்கள் (அயன், அஞ்சாதே), நல்ல கதைக்களத்தோட, லாஜிக்கோட இருக்கிற மாதிரி யதார்த்தமான படங்கள்.. (Ex: சுப்ரமணியபுரம், பசங்க, வெண்ணிலா கபடி குழு), காமெடி படங்கள் (சரோஜா), அவரவருக்கு விருப்பபட்ட நடிகர்களோட படங்கள்...

இது எல்லாத்துக்கும் எல்லையும் உண்டு, அளவுக்கு மிஞ்சினால்.... உதாரணங்கள் பல உண்டு.

எனக்கு ஒரு தனிபட்ட வருத்தம், யதார்த்தமா வர படங்கள் ஏன் மதுரைய சுத்தி இருக்கிற கிராமத்துல மட்டும் தான் எடுக்க முடியுமா?? அதுவும் எதாவது ஒரு வகையில சுத்தி சுத்தி வன்முறைய தான் காட்டணுமா??? சேலத்துல, திருச்சியில எல்லாம யதார்த்தமான, Soft ஆன ஆளுங்களே கிடையாதா??? அப்படியே வந்தாலும் ஏன் நம்ம ஆளுங்க அதை ஆர்ட் பிலிம் category ல அத சேர்த்துடறாங்க??

சரி இப்போ திருப்பியும் முதல் விசயத்துக்கு வருவோம்.. அந்த பாட்ட முதன் முதல்ல நண்பர்களோட கேட்கும் போது அதுல இருக்கிற ரெட்டை அர்த்த காமெடி தான் தெரிஞ்சது (உள்ளுக்குள்ள இருந்து ஒரு சைத்தான் சிரிக்குது).. ஆனா இதே பாட்ட குடும்பத்தோட உக்காந்து பார்க்க முடியுமா?? no chance.. So, இன்னொரு விசயத்த மறந்துட்டேன்.. குடும்பத்தோட தியேட்டருக்கு போற பழக்கமும் ரொம்ப குறைஞ்சிடிச்சு... Double Entendre பத்தி விக்கிபீடியா என்ன சொல்லுதுன்னு இங்க பாருங்க.. http://en.wikipedia.org/wiki/Double_entendre

இந்த மாதிரி ரெட்டை அர்த்த பாடல்கள் கோவில் திருவிழா சமயத்துல நடக்கும் கூத்துகள்ள தான் சாதாரணமா இருக்கும் (இங்க நல்ல தெருக்கூத்து கலைஞர்களை எந்த விதத்திலையும் குறிப்பிடல, இது குறவன் குறத்தி டான்ஸ் மாதிரி விசயம்).. அதுவும் நைட் 11-12 மணிக்கு மேல.. பெண்களும், குழந்தைகள் கூட்டமும் குறைந்த பிறகு.. it's more towards the targeted audience.. ஆனா இதே பாட்ட சினிமாவுலயும், டிவிலயும் திரும்ப திரும்ப கேட்க வேண்டிய சூழ்நிலை தான் இப்போது.. உங்கள யாரு இதயெல்லாம் பார்க்க சொன்னது கையில தான் ரிமோட் இருக்கேன்னு சொல்றவங்க கொஞ்சம் Practical ஆ யோசிச்சு பாருங்க pls.. Adults அ விடுங்க, இந்த காலத்து சின்ன பசங்க என்ன ஏதுன்னு முழுசா தெரியாமலயே இந்த மாதிரி பாடல்கள பாடறது ரொம்ப தர்ம சங்கடமான நிலைமை..

ரெண்டாவது இது தான் இந்த காலத்து டிரெண்டா??

இந்த மாதிரி படங்கள், பாடல்கள் இப்ப சமீபத்துல தான் வருதா, இல்லவே இல்ல... ஆரம்பத்துல இருந்தே அப்பப்ப இந்த மாதிரி வந்துகிட்டேத் தான் இருக்கு... ஆனா அதனுடைய அளவும், ரீச்சும் இப்ப அதிகமாயிருக்கு. முன்ன பத்துக்கு 1 படம் வந்தா இப்ப பத்துக்கு 3-4 படம் வருது போல.

கடைசியா திரைத்துறையினர் ஏன் இந்த மாதிரி எடுக்கிறாங்க?

இன்றைய வணிக உலகத்துல தியேட்டருக்கு வர ரொம்ப சில பேரையாவது திருப்தி பண்றோம்னு திரைத்துறையினர் சமரசம் செஞ்சுக்க வேண்டிய நிலைமை.. இவங்க கூட முழுசா விரும்பி இந்த மாதிரி செய்றாங்கனு தோணல? போட்ட பணத்தை எடுக்கவும், தோல்வி பட டைரக்டர், Artistனு ஆகாம தடுக்கவும் இந்த மாதிரி சில விசயங்கள சேர்க்கறாங்க.. போட்டிகள் ரொம்ப அதிகமா இருக்கிற காரணத்தினால தவறுகளும், குறுக்கு வழிகளும் பின்பற்ற படுகின்றன.. இது எங்க போய் முடியும்னு தான் தெரியல..சென்சார் போர்டுல இருந்து இந்த பாட்டு தப்பிச்சதானும் இன்னும் தெரியல... குறிப்பா A - U/A வாங்கின படங்கள் வந்த ரெண்டு மாசம் கழிச்சும் "Film is yet to be certified" னு தான் டிரைலர்ல போடறாங்க..


இவங்களுக்கு இன்னொரு முக்கியமான பிரச்சனை திருட்டு வி.சி.டி.. இப்பல்லாம் படம் வந்து ரெண்டாவது மூனாவது நாளே திருட்டு வி.சி.டி (VCD) கிடைக்குது.. இதை தவிர்க்க தயாரிப்பாளர், வினியோகஸ்தரே Original VCD அ படம் வெளியான உடனே கூடிய சீக்கிரம் வெளியட பட வேண்டியதுதான்.. அதுல வர வருவாயும் முறைப்படுத்தபடும்.. தயாரிப்பாளர்களுக்கு நிச்சயம் ரிஸ்க் குறையும்.. இப்ப மட்டும் எல்லா படத்துக்கும் தியேட்டர்ல என்ன கூட்டம் அலை மோதிக்கிட்டா இருக்கு.. அது மட்டும் இல்லாம தியேட்டர்களையும் தரமா வச்சிருந்தா வரவங்க வராமலா இருப்பாங்க?? தியேட்டர்ல படம் பாக்கறது ஒரு தனி அனுபவம்.. கூட்டமா சேர்ந்து பார்க்கும் போது இருக்கற சந்தோசமே தனி.. போட்டிகள சமாளிக்கவும், குறுக்கு வழிகள பின் பற்றாம இருக்கவும் இத விட்டா வேறு வழி உடனடியா இருக்கானு தெரியல.

நல்ல உலகத்தரமான படங்கள் தமிழ்ல அதிகம் வர வேண்டுங்கறது என்னோட (hopefully, எல்லோருடைய) ஆசை!!

5 comments:

  1. நன்றி. இந்த Topic-ல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய மறக்காதீர்கள்.

    ReplyDelete
  2. நல்ல ரசிகனின் ஆதங்கம் உங்கள் கருத்து மிக்க பதிவில் வெளிப்படுகிறது.

    ReplyDelete
  3. திரைப்படத்துறையினர்

    தங்கள் வலிமை தெரியாதவர்கள்.

    தங்களைத்தாங்களே மிக பரிதாபமாக நினைத்துக்கொண்டு கீழ்நிலைக்குச் செல்லும் ஒரு படிதான் நீங்கள் சொல்வது..,

    ReplyDelete
  4. // Chitra said...

    நல்ல ரசிகனின் ஆதங்கம் உங்கள் கருத்து மிக்க பதிவில் வெளிப்படுகிறது. //

    நன்றி.

    // SUREஷ் (பழனியிலிருந்து) said...

    திரைப்படத்துறையினர்

    தங்கள் வலிமை தெரியாதவர்கள்.

    தங்களைத்தாங்களே மிக பரிதாபமாக நினைத்துக்கொண்டு கீழ்நிலைக்குச் செல்லும் ஒரு படிதான் நீங்கள் சொல்வது.., //

    உண்மை. முற்றிலுமாக கீழ்நிலைக்கு சென்று விடக்கூடாது என்பது தான் என் ஆதங்கம்.

    ReplyDelete